Thursday, March 19, 2015

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது பொய் சொல்லாதீர்கள் !



தெரியாதததை தெரியும் என்று சொல்வது எவ்வளவு தப்பு. கார் ஓட்டத்தெரியுமா என்று கேட்டால் கார் ஓட்டும் வகுப்பிற்கு சென்ற சான்றிதழ் இருக்கும் காரணத்தால் தெரியும் என்று சொல்லி விடாதீர்கள். அப்புறம் காரை உங்கள் கையில் தந்து கண்டிக்கு சென்றுவரச்சொன்னால் நீங்கள் அடிபட்டுச்சாக வேண்டி வரும்.

நாங்கள் செய்யும் பல நேர்முகத்தேர்வுகளில் ஓரளவு அறிமுகம் உள்ள துறைகளையெல்லாம் டிப்ளோமா என்னும் பெயா போட்டு நிரப்பிய சுய விபரக்கோவைகளை அனு தினம் பார்வையிடுகிறோம்.

அண்மையில் பிரபல அச்சு நிறுவனமொன்று தமக்கு உடனடியாக கணினி வரைகலை தெரிந்தவர் (Graphic design-photoshop/corel draw,illustrator )ஒருவர் தேவை என குறிப்பிட்டனர். (சம்பளம் சுமார் 18,000 ஆயிரம ரூபாய்கள்) எமது இணைய விண்ணப்பதாரிகளின்(http://jobs.jaffnaonline.info/)  விபரங்களை தேடிய‌ போது சுமர் 43 பேர் தாம்  Graphic Designing  என்ற பயிற்சி நெறியில் சான்றிதழ் வைத்திருப்பதாயும் சுமார் 8 பேர் அத்துறையில் பணிபுரிய விருப்பம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்பு கொண்டபோது அவர்களில் இருவரைத்தவிர யாருமே அத்துறையில் பணியாற்றும் அளவிற்கு அறிவை கொண்டிருக்கவில்லை என்று அவர்களாகவே ஒப்புக்கொண்டனர்.

1)நாம் அவர்களிற்கு உதவுவதற்காக அவர்களை அழைத்து ,‌பேசி எவ்வளவு நேர விரையம் !
2)நீங்கள் என்னதான் கற்றிருந்தாலும் அதில் சிறப்புத்தேர்ச்சி இல்லை என்றால், டிப்ளோமா(Diploma in Graphic design..etc..) என்ற சொல்லால் அதைக்குறிக்காமால் -Sound Knowledge in Graphic designing /Sound Knowledge in Photoshop etc..   என்று குறிப்பிடுவதே சிறந்தது. (உங்கள் சான்றிதழ்  -Diploma அந்தப்பெயரில்தான் இருக்கும் - அது இரண்டு ஆண்டுகள் முழுநேரக்கல்வியாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய டிப்ளோமா)

No comments:

Post a Comment